"கலர் டிவி முறைகேடு வழக்கில் விடுதலை செல்லும்" - முன்னாள் அமைச்சர் செல்வகணபதி மீதான வழக்கு தள்ளுபடி

கலர் டிவி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி விடுதலை செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-07-31 14:06 GMT
கடந்த 1991-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது, கிராம பஞ்சாயத்துகளுக்கு இலவச கலர் டி.வி. வாங்கியதில், 85 லட்ச ரூபாய் முறைகேடு நடந்ததாக, அப்போதைய அமைச்சர் செல்வகணபதி மற்றும் எல்காட் நிர்வாகிகள் 2 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 3 பேரையும் விடுதலை செய்து கடந்த 2009ம் ஆண்டில் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில், செல்வகணபதி உள்ளிட்டோரின் விடுதலை செல்லும் என கூறி சி.பி.ஐ. மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஜெயசந்திரன் தள்ளுபடி செய்தார்.
Tags:    

மேலும் செய்திகள்