பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசுவை வீசிச் சென்ற கொடூரம் -பெற்றோர் குறித்து விசாரணை

கிருஷ்ணகிரி அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை சரக்கு வாகனத்தில் வீசிச் சென்ற பெற்றோர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2018-07-31 02:53 GMT
கிருஷ்ணகிரியை அடுத்த ராயகோட்டை சாலையில் உள்ள நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்று பார்த்த போது பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வாகன உரிமையாளர் தவுலத்பாஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் குழந்தையை மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர். மேலும் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்