குற்றாலத்தில் தொடங்கியது சாரல் விழா : இன்று மலர் கண்காட்சி நடைபெறுகிறது

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

Update: 2018-07-29 05:28 GMT
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. சுற்றுலாத் துறை சார்பில் நடைபெறும் இந்த விழாவில்,  அமைச்சர்கள் ராஜலெட்சுமி, வெல்லமண்டி நடராஜன், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், நடப்பாண்டு சுற்றுலாத் துறை மூலம் அரசுக்கு 24 புள்ளி 65 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Tags:    

மேலும் செய்திகள்