நாட்டின் தலைநகரைச் சொல்லி அசத்தும் 2 வயது குழந்தை

விழுப்புரத்தில், எந்த நாட்டின் பெயரைச் சொன்னாலும், அதன் தலைநகரைச் சொல்லும் 2 வயது குழந்தை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Update: 2018-07-26 09:25 GMT
* விழுப்புரம் பாண்டியன் நகரைச் சேர்ந்த சக்திவேல்- சிந்துஜா தம்பதியினரின் 2 வயது மகன், நிகில் பிரஜா. ஒன்றரை வயதில் இருந்தே, நிகிலுக்கு அதீத நினைவாற்றல் இருந்ததாக கூறப்படுகிறது. 

* அதையறிந்த பெற்றோர், நிகிலின் ஆற்றலை மேலும் மேம்படுத்தும் வகையில், 196 நாடுகளின் பெயர்கள், அதன் தலைநகரங்கள், மாநிலங்களின் தலைநகரங்கள், ராமாயண கதாபாத்திரங்கள், கோள்கள், உயிர்மெய் எழுத்துக்கள் என பலவற்றை நிகிலுக்கு சொல்லிக் கொடுக்க, அவனும் அவற்றை சரியாக நினைவில் வைத்துக் கொண்டு ஒப்பிக்கிறான்.

Tags:    

மேலும் செய்திகள்