"நீட் எழுதாத மாணவர்களின் சேர்க்கையை நிராகரித்தது சரியே" - பல் மருத்துவ கவுன்சில் உத்தரவை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

'நீட்' தேர்வு எழுதாமல் பல் மருத்துவத்தில் சேர்ந்த 8 பேரின் சேர்க்கைக்கு ஒப்புதல் வழங்க மறுத்த பல் மருத்துவ கவுன்சிலின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

Update: 2018-07-17 11:24 GMT
சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில், பல் மருத்துவ படிப்பில் 8 மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் சேர்க்கப்பட்டனர். நீட் தேர்வு எழுதாத இவர்கள் 8 பேரும், வெளிநாடு வாழ் இந்தியர் இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டதால், ஒப்புதல் அளிக்க இந்திய பல் மருத்துவ கவுன்சில் மறுத்து விட்டது. இதை எதிர்த்து 8 மாணவர்களும் தாக்கல் செய்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, 'நீட்' தேர்வு எழுதாததால், சேர்க்கைக்கு ஒப்புதல் மறுத்ததாக பல் மருத்துவ கவுன்சில் கூறியதை ஏற்ற நீதிபதி, மாணவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

எனினும், அந்த மாணவர்களின் எதிர் காலம் கேள்விக் குறியாக அமையும் என்பதால் அவர்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தனியார் கல்லூரி நிர்வாகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்