மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை

தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

Update: 2018-07-10 12:36 GMT
மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை

தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால், அருகே இருக்கும் நபர்கள் எவ்வாறு மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தீயணைப்பு துறையினர் செய்து காட்டினர். செயற்கை தீயை உருவாக்கி அதை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை வைத்து அணைக்க பயிற்சிகளும் வழங்கப்பட்டது. மேலும் தீயணைப்பு கருவிகளை இயக்கும் முறைகளையும் தீயணைப்பு வீரர்கள் செய்முறை செய்து காட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்