ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி, நவம்பரில் நடத்த முடிவு - அகில இந்திய கால்பந்து சம்மேளனம் திட்டம்
இந்தியன் சூப்பர் லீக் எனும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி, வரும் நவம்பர் மாதம் கேரளா அல்லது கோவாவில் நடத்த, அகில இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது.;
இந்தியன் சூப்பர் லீக் எனும் ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி, வரும் நவம்பர் மாதம் கேரளா அல்லது கோவாவில் நடத்த, அகில இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது. அதேநேரம் கொரோனா தொற்று காரணமாக போட்டிகளை ஒரே இடத்தில் நடத்தும் நோக்கில் கொல்கத்தாவில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்மேளனத்தின் ஆய்வுக் கூட்டம், அதன் துணைத் தலைவர் சுப்ரதா தத்தா தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஐஎஸ்எல் போட்டிகளை நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.