இந்தியா Vs இலங்கை 3வது டி-20 - இந்தியா அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான 3வது டி -20 போட்டியில் இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2020-01-10 19:18 GMT
புனேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ராகுல் , தவான் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர். தொடக்க விக்கெட்டுக்கு ராகுல் , தவான் இணை 97 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் மணிஷ் பாண்டே , சர்துல் தாக்கூர் இணை சிறப்பாக ஆட இந்தியா 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்தது..


தொடர் நாயகள் விருது - நவ்தீப் சைனி

இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. 30 ரன்களுக்குள் இலங்கை 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் மேத்யூஸ் - சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை 100 ரன்கள் கடந்தது. இருப்பினும் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசி இலங்கையை 123 ரன்களில் சுருட்டினர். இந்த வெற்றியின் மூலம் தொடரையும் இந்தியா 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. 


Tags:    

மேலும் செய்திகள்