இரவு பகலாக நடக்கும் கபடி போட்டி : 70-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு
ஈரோடு ஈ.பி.பி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்று வருகிறது.
ஈரோடு ஈ.பி.பி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஈரோடு,சேலம், சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து இரண்டு நாட்கள் இரவு பகலாக போட்டி நடக்கிறது. வெற்றிபெறும் வீரர்களுக்கு பரிசு தொகை மற்றும் சுழற் கோப்பைகள் வழங்கப்பட உள்ளது.