ஆஸி. வீரர்கள் புகாரால் ராயுடுக்கு சிக்கல்?
ராயுடு பந்தை எறிவதாக ஆஸி. வீரர்கள் புகார்
இந்திய கிரிக்கெட் வீரர் ராயுடு பந்தை எறிவதாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஐ.சி.சி.யிடம் புகார் அளித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது அம்பத்தி ராயுடு 2 ஓவர்கள் வீசினார். ஆனால், அவர் விதிகளுக்கு மீறி பந்தை எறிவதாக ஆஸ்திரேலிய வீரர்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, 2 வாரத்திற்குள் ராயுடுவின் பந்து வீச்சை ஆய்வு செய்ய ஐ.சி.சி. முடிவு எடுத்துள்ளது. எனினும் ராயுடு பேட்ஸ்மேன் என்பதால், அவருக்கு எவ்வித சிக்கலும் இல்லை.