இந்தியா-மே.இ.தீவுகள் 2வது டி-20 கிரிக்கெட் போட்டி : 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 71 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2018-11-06 19:12 GMT
லக்னோவில்  நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற  மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 195 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 111 ரன்கள் அடித்தார்.196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி  124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியா 71  ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
Tags:    

மேலும் செய்திகள்