இத்தாலி உலக செஸ் போட்டி - சென்னை சிறுவன் அசத்தல்
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற சென்னையை சேர்ந்த சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் பிரக்ஞானந்தா, இத்தாலியில் நடைபெற்று வரும் கிரெடியன் ஓபன் செஸ் போட்டியில் பங்கேற்றார். ஆரம்பம் முதலே அசத்தி வந்த பிரக்ஞானந்தா, இறுதி போட்டியில் நெதர்லாந்து வீரருடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த தொடரில் சிறுவன் பிரக்ஞானந்தா, 2 ஆயிரத்து 500 புள்ளிகளை கடந்துள்ளார். இதன்மூலம், இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தா, உலக அளவில் 13 வயதிற்குள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.