"சோதனை நடத்த வாருங்கள்"

சோதனை நடத்த வர வேண்டும் என, அமலாக்கத் துறைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2022-01-23 13:56 GMT
சோதனை நடத்த வர வேண்டும் என, அமலாக்கத் துறைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். அவர் காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அடுத்து வரும் நாட்களில் டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறை கைது செய்ய உள்ளதாக தகவல் வந்துள்ளதாக கூறினார். தம் மீதும், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பக்வந்த் மான் சிங் உள்ளிட்டோரிடம் சோதனை நடத்தக்கூடும் எனவும் அதனை வரவேற்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குறிபிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்