தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு : அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக,நாளை மறுநாள் முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை பா.ம.க. மூத்த தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

Update: 2021-05-08 10:30 GMT
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, நாளை மறுநாள் முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனை பா.ம.க. மூத்த தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார். ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், நடப்பு சுழற்சிக்கான 2 மாத மின் கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி கோரியுள்ளார். முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத் தொழில் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்