மே - 17 -க்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா?- டெல்லி மக்களுக்கு முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு விதித்துள்ள ஊரடங்கு உத்தரவு, வருகிற மே மாதம் 17 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

Update: 2020-05-12 10:26 GMT
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு விதித்துள்ள ஊரடங்கு உத்தரவு, வருகிற மே மாதம் 17 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ஊரடங்கை, திரும்ப பெறுவதாக வேண்டாமா என்பது குறித்து டெல்லி மக்கள் கருத்துகளை தெரிவிக்க அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து டெல்லியில் பேசிய அவர்,  8800007722 என்ற வாட்சாப் எண்ணிலோ,  delhicm.suggestions@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்