"தொகுதிக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்" - பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அட்வைஸ்

டெல்லியில் நடந்த பா.ஜ.க. ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நாடாளுமன்றம் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-17 08:43 GMT
டெல்லியில் நடந்த பா.ஜ.க. ஆட்சி மன்ற குழுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நாடாளுமன்றம் செயல்படும் என தெரிவித்துள்ளார். தொகுதிகளுக்கு சென்று மக்களிடம், கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர் கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். சில உறுப்பினர்கள் முன்கூட்டியே நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடிப்பதாக தெரிவித்திருந்த கருத்துக்கு தமது கண்டனத்தை பிரதமர் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்