தி.மு.க. எம்.பி.க்கு பொன்னாடை போர்த்திய அ.தி.மு.க.வினர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குப்பைகளை சேகரிக்க 50 லட்சம் ரூபாய் மதிப்பில் 3 சக்கர ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-08-18 03:30 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குப்பைகளை சேகரிக்க 50 லட்சம் ரூபாய் மதிப்பில் 3 சக்கர ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத வகையில்,திமுக கூட்டணியின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாமக்கல் எம்.பி.  சின்ராஜ் திடீரென வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த ராசிபுரம் அதிமுக நகரசெயலாளர் பாலசுப்பரமணி மற்றும் ஒன்றியசெயலாளர் காளியப்பன் ஆகியோர் சின்ராஜ்க்கு அமைச்சர் முன்னிலையிலேயே  பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்