"மாணவர்களின் வன்முறைக்கு திரைப்படத்துறையினரே காரணம்" - தமிழிசை
"திரைப்படத்துறையினருக்கும் சமூக பொறுப்பு உள்ளது"
திருவெற்றியூர் காலடிப் பேட்டை மார்க்கெட் பகுதியில் காய்கறி விற்பனையாளர்களிடம் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தமிழக பாஜக தலைவர் தமிழிசை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் வன்முறை கலாச்சாரத்திற்கு திரைப்படத்துறையினரே காரணம் குற்றஞ்சாட்டினார். திரைப்படத்துறையில் அரசியலில் தேடுகிறார்களே தவிர நல்ல கொள்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் புகார் கூறினார்.