வருமான வரி சோதனை : "எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு ஏவப்படுகிறது" - கி.வீரமணி
வருமான வரி சோதனை என்கிற பெயரில் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.
வருமான வரி சோதனை என்கிற பெயரில் எதிர்க்கட்சிகள் மிரட்டப்படுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக, தோல்வி பயம் காரணமாக வருமான வரிதுறை, புலனாய்வுத் துறை மூலம் எதிர்கட்சிகளை மிரட்டி வருகிறது என்றார். பாஜக அரசு விவசாயிகளை காப்பாற்றுவதற்கு பதில் கார்ப்பரேட் முதலாளிகளை காப்பாற்றி வருவதாகவும் கி. வீரமணி குற்றம் சாட்டினார்.