"தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை மக்களுக்காக பணியாற்றி வருபவர்" - பியூஷ்கோயல்

காங்கிரஸ் - திமுக வாரிசு அரசியலை முன்னெடுத்து வருவதாகவும், பாஜக அதை எதிர்த்து போராடுவதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-27 09:28 GMT
காங்கிரஸ் - திமுக வாரிசு அரசியலை முன்னெடுத்து வருவதாகவும், பாஜக அதை எதிர்த்து போராடுவதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு வந்த பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்த போது, இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திமுக மற்றும் காங்கிரஸ் நேர்மையான உழைக்கும் தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்காமல், அவரவர் பிள்ளைகளுக்கே வாய்ப்பளித்துள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என்று கூறிய அவர், "நாற்பதும் நமதே" என்று கூறினார்.   

Tags:    

மேலும் செய்திகள்