"எமர்ஜென்சி கட்சியுடன் கூட்டணி வைத்து பேசுவதா?" - சீதாராம் யெச்சூரிக்கு தமிழிசை பதிலடி

தேர்தல் தேதியை அறிவிக்க போதுமான கால அவகாசம் இருப்பதாக பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-10 02:46 GMT
தேர்தல் தேதியை அறிவிக்க போதுமான கால அவகாசம் இருப்பதாக பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, எமர்ஜென்சி கொண்டுவந்து இந்தியாவையே முடக்கிய கட்சியுடன் கூட்டணி வைத்துகொண்டு பேசுவதா? என்றார். பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகளில் தமிழகம் வரும் போதெல்லாம் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்றும்,  தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டும் தமிழகம் வருகிறார் என எதிர்கட்சிகள் சொல்வது தவறு என்றும் குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்