கஜா புயலின் போது வராத பிரதமர், தேர்தலுக்காக வருகிறார் - வீரமணி
சென்னை வேப்பேரியில் திராவிடர் கழக தலைவர் வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னை வேப்பேரியில் திராவிடர் கழக தலைவர் வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கஜா புயலின் போது தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தற்போது, தேர்தலுக்காக வந்ததாக விமர்சித்தார். பா.ஜ.கவுடன் கூட்டணி சேர அனைத்து கட்சிகளும் தயங்குவதாக கூறிய அவர், அதிமுகவை அச்சுறுத்தி கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். இருந்த போதும், தென் மாநிலங்களில் பாஜக காலூன்ற வாய்ப்பே இல்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார்.