இந்திய விமானப்படை வலிமையாவதை காங். விரும்பவில்லை - பிரதமர் மோடி

இந்திய விமானப்படை வலிமையாவதை காங்கிரஸ் விரும்பவில்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2019-02-07 19:37 GMT
இந்திய விமானப்படை வலிமையாவதை, காங்கிரஸ் விரும்பவில்லை என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.  மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, தமது அரசு நேர்மையான ஊழலற்ற அரசு என்றார். ஊழலற்ற ஆட்சி நடத்தி வருவதால், நேர்மைக்கு இளைஞர்கள் வாக்களிப்பார்கள் என்று தெரிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான அரசு 55 ஆண்டுகளில் செய்யாததை, பாஜக அரசு வெறும் 55 மாதங்களில் செய்து முடித்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்