"மக்களைப் பற்றி கவலைப்படாத அதிமுக அரசு" - ஸ்டாலின் குற்றச்சாட்டு
மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக அதிமுக ஆட்சி இருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
சிவகங்கை மாவட்டம் கீழடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு பேசினார். திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று குற்றம் சாட்டினார்.