"வேலைவாய்ப்பு உறுதி சட்டம் கொண்டு வரவேண்டும்" - வேல்முருகன் வலியுறுத்தல்

மத்திய மாநில வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-29 21:47 GMT
மத்திய மாநில வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில்  கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். தமிழகத்தில் அமைந்துள்ள மத்திய அரசு பணிகளில்  90 சதவீதமும்,  மாநில அரசில் 100 சதவீதமும் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு உடனடியாக வேலை வாய்ப்பு  உறுதி சட்டத்தினை கொண்டுவர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்