அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்து விசாரணை : சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல்

மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகாரில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடர்பான விசாரணை அறிக்கையை, லஞ்ச ஒழிப்பு துறை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-01-29 10:28 GMT
சென்னை, கோவை மாநகராட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அமைச்சர் வேலுமணி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி,  நெருங்கியவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அறப்போர் இயக்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டெண்டர் முறைகேடு குறித்து அமைச்சர் வேலுமணிக்கு எதிராக திமுக அளித்த புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த பொதுத்துறை முதன்மை செயலாளர் அனுமதி அளித்துள்ளதாகவும், அதன்படி,  ஆரம்பகட்ட விசாரணை தொடங்கியுள்ளதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு விசாரணையை தொடரலாம் எனவும், விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் அறிவுறுத்திய  நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்