மேகதாது விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

மேகதாது விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசை, மத்திய அரசு விமர்சித்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-13 12:30 GMT
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். வங்கிகள் மூலம் வழங்கப்படும் புயல் நிவாரண நிதியை, கடனுக்கு சில வங்கிகள் பிடித்தம் செய்வதாக குற்றஞ்சாட்டிய முத்தரசன்,  இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்