"நள்ளிரவில் எனது வீட்டிற்கு போலீசார் வந்திருந்தனர்" - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் டிவிட்டரில் பதிவு

தனது வீட்டிற்கு போலீசார் வந்தது குறித்து இயக்குநர் முருகதாஸ் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-08 19:12 GMT
தனது வீட்டிற்கு போலீசார் வந்தது குறித்து இயக்குநர் முருகதாஸ் சமூகவலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நள்ளிரவில் போலீசார் தனது வீட்டிற்கு வந்து பல முறை கதவை தட்டியதாகவும், தான் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் அவர்கள் திரும்பி சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது வீட்டிற்கு வெளியே தற்போது போலீசார் யாரும் இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் முருகதாஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்