"கல்வித்தரம் குறைய துணைவேந்தர் நியமன முறைகேடும் காரணம்" - கிருஷ்ணசாமி

முறைகேடு நடந்திருப்பது குறித்து முன்னாள் ஆளுநர் மற்றும் தற்போதைய ஆளுநரிடம் புகார் அளித்து உள்ளதாக தெரிவித்தார்.

Update: 2018-10-07 22:49 GMT
தமிழகத்தின் கல்வி தரம் மிக தாழ்ந்து போவதற்கு துணைவேந்தர் நியமன முறைகேடு ஒரு முக்கிய காரணம் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தெரிவித்து உள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது குறித்து 
முன்னாள் ஆளுநர் மற்றும் தற்போதைய ஆளுநரிடம் புகார் அளித்து உள்ளதாக தெரிவித்தார். இடஒதுக்கீட்டின் பலன் எந்த சமுதாயத்துக்கும் முழுமையாக கிடைக்கவில்லை என்றும் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்