பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு ஏதும் செய்யப்போவதில்லை - டிடிவி தினகரன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு எதுவும் செய்யப்போவதில்லை என்றார்.

Update: 2018-09-11 11:07 GMT
இமானுவேல் சேகரனின் 61வது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடி செல்வதற்கு முன்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு எதுவும் செய்யப்போவதில்லை என்றார். ராஜஸ்தான், ஆந்திரா போல தமிழகமும் வரியைக் குறைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்