இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசு முட்டுக்கட்டை போடுகிறது - அமைச்சர் ஜெயகுமார்

இந்திய, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.

Update: 2018-09-08 07:23 GMT
இந்திய, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை அரசு முட்டுக்கட்டையாக இருப்பதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 163 விசைப்படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மீட்க முடியாமல் போனால் புதிய படகுகள் வாங்க மீனவர்களுக்கு அரசு மானியம் வழங்கும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்