குமாரபாளையத்தில் மின்கம்பி புதைவட பாதை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் - அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் நகராட்சி அளவில் முதல் முறையாக குமாரபாளையம் நகராட்சியில் மின்கம்பி புதைவட பாதை அமைக்கும் பணியை மின்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

Update: 2018-09-02 04:42 GMT
45 கிலோமீட்டர் தொலைவுக்கு 25 கோடியே 72 லட்சம் செலவில் இந்த பணி மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். சென்னை, மதுரை, கோவை, ​திருச்சி மற்றும் சேலத்தில் இந்த பணி முடிவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ஈரோடு மாநகராட்சி பகுதியில் இப்பணியை தொடங்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு 59 கோடி ரூபாய் நிதிஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்