தெற்கில் உதித்தெழுந்த சூரியன் : கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு
சென்னையில் இன்று நடைபெற்ற கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்கள்
திமுக பொருளாளர் துரைமுருகன் :
* இந்திய அரசியல் அரங்கில் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கு மூல காரணமாக இருந்தவர் கருணாநிதி
* கருணாநிதியை தவிர்த்துவிட்டு, திராவிட வரலாற்றை யாரும் எழுத முடியாது
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி:
* நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், இரங்கல் தெரிவிக்கப்பட்ட வரலாறு கருணாநிதிக்கு உள்ளது
* எமர்ஜென்சி காலத்தில் திமுகவின் பங்கு அளப்பரியது
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி :
* மக்கள் பிரச்சினைகளை சட்டசபையில் எப்போதும் முன் வைப்பவர் கருணாநிதி
தேவகவுடா:
*20 வருட காலம் மத்தியில் நிலையான ஆட்சிகள் அமைய கருணாநிதி காரணம்
பீகார் முதல்வர் நிதிஷ்குமார்:
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு படிப்படியாக கொண்டுவரப்படும் என்ற கருணாநிதியின் கொள்கைகளை ஸ்டாலினும் எடுத்து செல்ல வேண்டும்
குலாம் நபி ஆசாத்:
* நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் போராடியவர் கருணாநிதி
டெரிக் ஓ பிரையன்
* மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து போராடியவர் கருணாநிதி
* கூட்டாட்சி தத்துவம், மாநில சுயாட்சிக்கு முன்னுரிமை அளித்தவர் கருணாநிதி
சீதாராம் யெச்சூரி
* அவசரநிலை பிரகடனத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் கருணாநிதி