"வீணடிக்கப்படும் காவிரி நீர்" - வைகோ கண்டனம்
காவிரி ஆற்றில் நீர் நிரம்பி வழிந்தும் அவை பயனற்றுப் போய் கடலுக்குச் செல்லும் நிலைமை வேதனை அளிப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
காவிரி ஆற்றில் நீர் நிரம்பி வழிந்தும் அவை பயனற்றுப் போய் கடலுக்குச் செல்லும் நிலைமை வேதனை அளிப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள், தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகளை, தூர் வாரி பராமரிக்கும் பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.