திமுக தலைவர் கருணாநிதிக்கு வீட்டிலேயே சிகிச்சை...

திமுக தலைவர் கருணாநிதிக்கு 24 மணி நேரமும், வீட்டிலேயே, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், யாரும் அவரை பார்க்க வர வேண்டாம் என, மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Update: 2018-07-27 04:32 GMT
தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகத்தால், உடல்நலத்தில் நலிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக தொற்று காரணமாக, காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தேவையான மருந்துகள் செலுத்தப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு, 24 மணி நேரமும், மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்து வருவதாகவும், கருணாநிதியின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் எனவும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


"கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம்" - மருத்துவர்கள் 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக 4 பேர் கொண்ட மருத்துவக் குழு காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கோபாலபுரம் இல்லம் முன், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இணைப்பு சாலைகள்  அனைத்தும் இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. 


Tags:    

மேலும் செய்திகள்