"ராகுல் காந்திக்கு பிரதமர் நாற்காலி மீதே கவனம்" "எனது கேள்விகளுக்கு பதில் தெரியாததால் கட்டிப்பிடித்தார்"- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நாற்காலி மீதே எப்போதும் கவனம் வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

Update: 2018-07-21 11:57 GMT
பிரதமர் நரேந்திர மோடி, இன்று உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில், பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், விவசாயிகளின் நலனுக்காக பாஜக அரசு கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக அரசு மீது ஏன் நம்பிக்கை வைக்கவில்லை என எதிர்க் கட்சியினரை பார்த்து தாம் கேட்டதாக கூறினார். ஆனால் இதற்கு பதில் தெரியாததால்,  தன்னை ராகுல் காந்தி கட்டித் தழுவியதாகவும் அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்