"வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்" - துணை முதல்வர் பன்னீர்செல்வம் உறுதி

சட்டப்பேரவையில், திமுக சார்பில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்.

Update: 2018-07-04 09:14 GMT
சென்னை வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் திட்டம், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், திமுக சார்பில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், பறக்கும் ரயில் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூர நிலங்களின் உரிமையாளர்கள், இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துதவுடன், திட்டப் பணிகள் முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்