கமல் வீட்டிற்குள் நுழைந்து திருட முயன்றவர் கைது

கொள்ளை முயற்சி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Update: 2018-06-30 07:14 GMT
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் வீட்டின் பின்வழியாக நேற்று பட்டப்பகலில் சுவர் ஏறிக்குதித்து, வாலிபர் ஒருவர் நுழைந்துள்ளார். 

பின்னர் வீட்டின் அறைகளுக்குச் சென்று வந்த அவர் மீது சந்தேகம் அடைந்த அங்கிருந்தவர்கள், அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அந்த நபர் கடலூரைச் சேர்ந்த சபரிநாதன் என்பதும்,  முன்னுக்கு பின் முரணாக பேசியதும் தெரிந்தது. இதையடுத்து , கொள்ளை முயற்சி உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்