"ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத நடவடிக்கை கண்காணிப்பு" - பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

தமிழகத்தில், ஐ. எஸ் பயங்கரவாத இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-06-28 01:41 GMT
சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அவர், தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த பலர் முயற்சி செய்வதாக கூறினார். மேலும், தமிழகத்தில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இளைஞர்கள் இணைவது தடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்