"இடம் தேர்வு செய்து தந்தால் 'அம்மா மருந்தகம்'" - கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி

சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் தேர்வு செய்து தந்தால், மலைப் பகுதிகளில் 'அம்மா மருந்தகம்' அமைத்து தரப்படும்.

Update: 2018-06-25 09:26 GMT
சட்டப்பேரவையில் இன்று வால்பாறை மற்றும் சேந்தமங்கலம் தொகுதி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில் இயங்கி வரும் 11 அம்மா மருந்தகங்கள் மூலம் இதுவரை 700 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் தேர்வு செய்து தந்தால், மலைப் பகுதிகளில் 'அம்மா மருந்தகம்' அமைத்து தரப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதி அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்