ஜாலியாக டூர் சென்ற நேரம்..3 கோடிக்கு வேட்டு வைத்த பலே கும்பல்..ரஜினிகாந்த் பட தயாரிப்பாளர் வீட்டில்

Update: 2023-10-31 16:20 GMT

பெங்களூருவை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் பிரமரேஷின். நடிகர் ரஜினிகாந்தின் லிங்கா பட தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷின் சகோதரரான இவரின் வீட்டில், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரு மகாலட்சுமி லே அவுட் பகுதியில் வசித்து வரும் பிரமரேஷ், கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி கிரீஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற நிலையில், இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியிருக்கிறது. 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐந்தரை கிலோ தங்க நகைகள் மற்றும் 6 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்க பட்டிருப்பது தெரியவர, புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார், 6 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த வழக்கில், பிரமரேஷின் வீட்டு காவலாளி மீது சந்தேகம் கொண்டுள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்