159 வீடுகளில் ரகசியமாக வாக்கு பதிவு செய்த மக்கள்

Update: 2024-05-07 07:47 GMT

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் படிவம் 12டி மூலம் விண்ணப்பித்தவர்களிடம் வாக்குள் சேகரிக்கப்பட்டது. திருப்பதி மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஆயிரத்து 500 பேர் படிவம் 12 டி மூலம் வாக்களிக்க விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் வீடுகளுக்குச் சென்ற தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தலைவர்கள், நுண் பார்வையாளர்கள், போலீசார் ஆகியோரின் முன்னிலையில், ரகசியமாக வாக்குகளை பதிவு செய்தனர். ஸ்ரீகாளஹஸ்தியில் 159 வீடுகளுக்கு சென்று அதிகரிகள் வாக்குகளை சேகரித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்