அடுத்த சிக்கல்... பறந்த உத்தரவு... அமலாக்கத்துறை மீண்டும் அதிரடி

Update: 2024-02-13 07:21 GMT

ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க முறைகேடு வழக்கில், முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா இன்று ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 11ம் தேதி ஏற்கனவே அனுப்பிய சம்மனை பரூக் அப்துல்லா புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தனியார் வங்கி கணக்குகளுக்கு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்