வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம்: ரூ.3 லட்சம் இழப்பீடு - சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

Update: 2021-11-21 05:43 GMT
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான, நாடுமுழுவதும் நடைபெற்ற தொடர் போராட்டத்தில் 700க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்த‌தாக, விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்த நிலையில், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு 3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்