காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு - 2 தொழிலாளர்கள் பலி

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீகாரை சேர்ந்த 2 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

Update: 2021-10-18 03:31 GMT
காஷ்மீரில் சமீப காலமாக பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீரில் உள்ள வெளி மாநில வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த குடியிருப்புக்குள் நுழைந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் பீகாரை சேர்ந்த 2 தொழிலாளர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு தொழிலாளி படுகாயம் அடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிரவாதிகளை தேடுதல் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக நேற்று ஸ்ரீநகர் மற்றும் புல்வாமா பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய துபாக்கிச்சூட்டில் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்