யானைகளுக்கிடையே மோதல் - மின் கம்பத்தில் மோதிய யானை உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உயிரிழந்த யானையை காண படையெடுத்த யானைகள் கூட்டத்தால், பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-13 08:38 GMT
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உயிரிழந்த யானையை காண படையெடுத்த யானைகள் கூட்டத்தால், பரபரப்பு ஏற்பட்டது. பலமனேரி மண்டலம் பகுதியில், 2 யானைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது. இதில், மின்கம்பத்தின் மீது மோதிய யானை ஒன்று, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து, உயிரிழந்த யானையை சுற்றி முகாமிட்டிருந்த யானைகள் கூட்டம், பயிர்களை நாசம் செய்து, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. பின்னர், தகவலறிந்து வந்த வனத்துறையினர், போராடி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்