"2 ஆண்டுகள் சிறை- ரூ.10,000 அபராதம்" : தொற்று நோய்கள் மசோதா நிறைவேற்றம்

தொற்று நோய்கள் மசோதா நிறைவேற்றியதால், இனி, கேரளாவில், நிபந்தனைகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

Update: 2021-06-04 02:11 GMT
கேரளாவில் தொற்று நோய்கள் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால், சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு நிபந்தனைகள், விதிமுறைகளை மீறியோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை , மற்றும் பத்தாயிரம் ரூபாய்  அபராதம் விதிக்கப்பட உள்ளது. இந்த மசோதா மூலம், தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல், தடுப்பது தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைத்து நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்