2 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு - இந்தியாவில் ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 449 பேர் உயிரிழந்துள்ளனர்

Update: 2021-05-04 08:13 GMT
2 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு - இந்தியாவில் ஒரே நாளில் 3,449 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 449 பேர் உயிரிழந்துள்ளனர்.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி,கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து  57 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 2 லட்சத்து 82ஆயிரத்து 833ஆக  உயர்ந்துள்ளது.3 ஆயிரத்து 449 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை.இரண்டு லட்சத்து 22 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 20 ஆயிரத்து 289 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில்,34 லட்சத்து 47 ஆயிரத்து 133 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 15 கோடியே 89 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்