பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கால அவகாசம் ஜூன் இறுதி வரை நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது

Update: 2021-04-01 03:44 GMT
பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கால அவகாசம் ஜூன் இறுதி வரை நீட்டிப்பு 

பான் எண்ணுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.பான் எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில்,  நேற்றுடன் கால அவகாசம் முடிவதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இணைக்க தவறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. பான் எண்ணுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கு வருமானவரித் துறை இணையதளத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் முயற்சி செய்ததால், நேற்று காலையிலிருந்து இணையதளம் முடங்கியது,.  இந்த நிலையில் மேலும் ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்