வன மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரபாஸ் ரூ.2 கோடி நிதியுதவி

இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பிரபாஸ், சுமார் 1650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும், தெலங்கானா மாநில நகர்ப்புற வன மேம்பாட்டு பணிகளுக்காக 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Update: 2020-09-08 07:42 GMT
இந்திய அளவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பிரபாஸ், சுமார் 1650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும்,  தெலங்கானா மாநில நகர்ப்புற வன மேம்பாட்டு பணிகளுக்காக 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும், ஐதரபாத் அவுட்டர் ரிங் சாலையில், ஹைதரபாத்துக்கு 20 கி.மீ. தூரத்தில் வனப்பகுதி ஒன்றையும் பிரபாஸ் தத்தெடுத்துள்ளார். இந்நிலையில், அருகாமையில் சுற்றுச் சூழல் பூங்கா அமைப்பதற்கு முடிவு செய்த நிலையில், அதற்கான அடிக்கல்லை, நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ்குமார் மற்றும் தெலங்கானா அமைச்சர் இந்திராகரன் ரெட்டி அல்லோலா ஆகியோருடன் இணைந்து பிரபாஸ் நட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்